Last Updated : 19 Apr, 2024 06:37 PM

 

Published : 19 Apr 2024 06:37 PM
Last Updated : 19 Apr 2024 06:37 PM

“மாற்றத்தைக் கொண்டுவரும் தேர்தல்” - முதல் முறையாக வாக்களித்த அன்புமணி மகள் சஞ்சுத்ரா

அன்புமணி ராமதாஸின் மகள் சஞ்சுத்ரா தன் சகோதரிகள் மற்றும் தந்தையுடன். (இடமிருந்து வலம் நான்காவதாக)

விழுப்புரம்: “நல்ல ஆட்சி, நல்ல தலைவர்கள் வரவேண்டும். அப்பா, அம்மா சொல்கிறார்கள் என வாக்களிக்காமல் நீங்களே யோசித்து முடிவெடுங்கள்” என்று முதல் முறையாக வாக்களித்த அன்புமணி ராமதாஸின் மகள் சஞ்சுத்ரா தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூர், விக்கிரவாண்டி, விழுப்புரம், திருக்கோவிலூர் ஆகிய தொகுதிகளில் வசிக்கும் வாக்காளர்களில் 18 வயது முதல் 19 வயது வரை உள்ள 34,232 வாக்காளர்கள் இன்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்களித்தனர்.

முதன்முறையாக வாக்களித்த வாக்காளர்களில் ஒருவர் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸில் இளைய மகள் சஞ்சுத்ராவும் ஒருவர். அவர் தன் சகோதரிகள் மற்றும் தந்தையுடன் மரகதாம்பிகை நிதி உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் வாக்களித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது, “முதல் முறை வாக்களிக்கும்போது சற்று தயங்கமாக உள்ளது. நான் தற்போது மாணவி, அரசியலுக்கு வருவேனா இல்லையா என யோசிக்கவில்லை. அப்பா, அம்மா சொல்கிறார்கள் என வாக்களிக்காமல் நீங்களே யோசித்து முடிவெடுங்கள்.

நல்ல ஆட்சி, நல்ல தலைவர்கள் வரவேண்டும் என யோசித்து முடிவெடுங்கள். மாற்றங்கள் நிறைய வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் மாற்றம் வேண்டும். இந்த தேர்தல் நல்ல மாற்றத்தை கொண்டுவரும் என நம்புகிறேன். வாக்களிக்காமல் அரசை குறை சொல்வது தவறானது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x