“மக்களைப் பற்றி சிந்திப்பவர்களுக்கு வாக்களியுங்கள்” - சி.வி.சண்முகம் பேட்டி

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்
Updated on
1 min read

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த அவ்வையார் குப்பத்தில் சி.வி.சண்முகம் எம்.பி மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், “மக்களுக்காக பாடுபடுகின்றவர்களுக்கு வாக்களியுங்கள்” என்றார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், (ஏப்.19) இன்று முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அவ்வையார் குப்பம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் வாக்கு மக்களாக வரிசை நின்று வாக்களித்தார்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது மாற்றத்திற்கான தேர்தல், மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மிகப்பெரிய ஒரு தேர்தல். இந்த தேர்தலில் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். மக்களைப் பற்றி சிந்திக்கின்ற, மக்களுக்காக பாடுபடுகின்றவர்களுக்கு வாக்களியுங்கள். மாற்றத்துக்காக வாக்களிக்க வேண்டும்” என்றார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in