Published : 03 Apr 2018 09:47 AM
Last Updated : 03 Apr 2018 09:47 AM
தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று பகல் 1 மணி முதல் 2 மணி வரை தர்ணா போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைமை நிலையச் செயலாளரும் சென்னை மாவட்டத் தலைவருமான டாக்டர் பி.பாலகிருஷ் ணன் தலைமையில் நடந்த போராட்டத்தில் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து டாக்டர் பி.பாலகிருஷ்ணன் கூறியபோது, ‘‘தேசிய மருத்துவ ஆணைய சட்ட மசோதாவில் பல குளறுபடிகள் உள்ளன. இந்த குளறுபடிகள் அனைத்தும் களையப்பட வேண்டும். இதை வலியுறுத்தி நாடு முழுவதும் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் ஒரு மணி நேரம் பணிகளை புறக்கணித்து தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT