ரம்ஜான், வார இறுதி நாட்களையொட்டி 1,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ரம்ஜான், வார இறுதி நாட்களையொட்டி 1,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Updated on
1 min read

சென்னை: ரம்ஜான் மற்றும் வார இறுதி நாட்களையொட்டி சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 1,265 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாளை (ஏப்.11) ரம்ஜான் பண்டிகை, ஏப்.13,14 வார இறுதி நாட்கள் (சனி, ஞாயிறு) என்பதால் சென்னையில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஏப்.10,12,13 ஆகிய 3 நாட்களும் 945 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகியஇடங்களுக்கு 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 1,265 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளில் www.tnstc.in என்றஇணையதளம் மற்றும் tnstcசெயலி மூலமாகவும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து|நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இன்று பயணிக்க சுமார் 8 ஆயிரம் பேரும், இந்தவார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் முன்பதிவு செய் துள்ளனர். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in