Published : 26 Apr 2018 09:48 AM
Last Updated : 26 Apr 2018 09:48 AM
சாலை பாதுகாப்பு வாரத்தை ஒட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகளுக்கு காவல் ஆணையர் இலவசமாக ஹெல்மெட்களை வழங்கினார்.
தமிழகம் முழுவதும் 23-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 29-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டை போக்குவரத்து காவல் துறை சார்பில் அண்ணா மேம்பாலத்தின் அருகில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் கலந்துகொண்டார். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் இல்லாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அவர் இலவசமாக ஹெல்மெட்களை வழங்கினார்.
அப்போது எமதர்மனாக வேடமிட்டு வந்த ஒருவருக்கும் காவல் ஆணையர் ஹெல்மெட் வழங்கினார். சுமார்100 பேருக்கு இலவசமாக ஹெல்மெட்கள் வழங்கப்பட்டன. பின்னர் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறுந்தகட்டையும் காவல் ஆணையர் வெளியிட்டு வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் கணேசமூர்த்தி, போக்குவரத்துக் காவல் இணை ஆணையர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT