திருக்குறளை தேசிய நூலாக்க நடவடிக்கை: மதிமுக தேர்தல் அறிக்கை

திருச்சியில் நேற்று மதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட வைகோ. படம்: ரா. செல்வமுத்துகுமார்
திருச்சியில் நேற்று மதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட வைகோ. படம்: ரா. செல்வமுத்துகுமார்
Updated on
1 min read

மதிமுக தேர்தல் அறிக்கையை கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ திருச்சியில் நேற்று வெளியிட்டார்.

அதில், மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி முறை நிலவ வேண்டும். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தப்படும்.

புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யவும், சுங்கச்சாவடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வலியுறுத்தப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்ட 200 நாட்களாக உயர்த்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டின் பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம், ஒரேநாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் ஆகியவற்றை கைவிட வலியுறுத்தப்படும் என்பன உள்ளிட்ட 74 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in