Published : 24 Apr 2018 08:48 AM
Last Updated : 24 Apr 2018 08:48 AM
பெட்ரோல், டீசல் விலை உயர் வை கண்டித்து சென்னை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சென்னை மண் டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உட் பட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரி யம் அமைக்க வலியுறுத்தியும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்ய அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்தும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன மண் டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முடிவு செய்தனர். அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத் தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன அலுவலகம் எதிரே நேற்று காலை தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல் முருகன் தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டனர். காவிரி மேலாண் மை வாரியம் அமைக்கக் கோரியும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் கோஷமிட்டனர். பின்னர், இந்தியன் ஆயில் நிறுவனத்தை முற்றுகையிட சென்ற வேல் முருகன் உள்ளிட்ட 250 பேரை போலீஸார் தடுத்து கைது செய்தனர்.
மெரினாவில் போராட்டம்
முன்னதாக செய்தியாளர்களிடம் வேல்முருகன் கூறிய தாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் தமிழகத்தில் கடந்த 20 நாட்களாக மிகப்பெரிய போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த அறப் போராட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி சிறிதும் மதிக்கவில்லை. எனவே, தமி ழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் வரும் 29-ம் தேதி மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே காவிரி வாரியம் அமைக்கும் வரை போராடுவோம்.
பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய எஸ்.வி.சேகர், பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழகத்தில் அவர் எங்கு சென்றாலும் எங்கள் கட்சி எதிர்ப்பை பதிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT