Published : 02 Apr 2024 06:10 AM
Last Updated : 02 Apr 2024 06:10 AM

மெட்ரோ ரயில் பயணத்துக்கு க்யூஆர் டிக்கெட் பெறாதவர்களுக்கு பணம் திருப்பி தர நடவடிக்கை

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தானியங்கி கட்டண வசூல் முறையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, சென்னை மெட்ரோவில் ஸ்டேடிக் க்யூஆர் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட் பெறும் சேவையில் மார்ச் 31-ம் தேதி காலை 11 முதல் இரவு 8 மணி வரையிலும், ஏப்.1-ம் தேதி காலை 11.30 முதல் மதியம் 1 மணி வரையிலும் தடை ஏற்பட்டது.

மெட்ரோ ரயில் டிக்கெட்டுக்கு பணம் செலுத்தி, க்யூஆர் பயணச்சீட்டை பெறாதவர்களுக்கு, பணத்தை திருப்பிச் செலுத்த ஏற்கெனவே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை பணத்தை திரும்பப் பெறாதவர்களுக்கு 2 நாட்களில் திரும்பச் செலுத்தப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x