Published : 13 Apr 2018 11:07 AM
Last Updated : 13 Apr 2018 11:07 AM

காவிரி மேலாண்மை வாரியம் கோரி வைகோ மைத்துனர் மகன் தீக்குளிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி விருதுநகரில் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மைத்துனர் மகன் 100 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மைத்துனர் மகன் சரவண சுரேஷ் (50). இவர் விருதுநகர் ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்தவர்.

இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கம் அருகே காரில் சென்றுகொண்டிருந்த சரவண சுரேஷ், திடீரென கீழே இறங்கி உடலில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்தார். இதையடுத்து, 100 சதவீத தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்ட சரவண சுரேஷை அங்கிருந்தவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து, மேல்சிகிச்சைக்காக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சரவண சுரேஷ் தீக்குளித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சரவண சுரேஷ், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x