Published : 06 Feb 2018 08:19 AM
Last Updated : 06 Feb 2018 08:19 AM
சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை (ஈசிஆர்), பழைய மாமல்லபுரம் சாலை (ஓஎம்ஆர்), மெரினா காமராஜர் சாலை, அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல முக்கிய சாலைகளில் பைக் ரேஸ் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
அதன்படி, போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அருண் தலைமையில் பைக் ரேஸை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேப்பேரி ஈவி ஆர் சாலை, ரித்தர்டன் சாலை சந்திப்பு பகுதியில் பைக் ரேஸ் நடந்து வருவதாக புகார் வந்தது. இதைத் தொடர்ந்து வேப்பேரி போலீஸார் அந்தப் பகுதியை கண்காணித்து, பைக் ரேஸில் ஈடுபட்டதாக அரும்பாக்கத்தைச் சேர்ந்த சஞ்சய் (24), முகமது தகீம் (19), எருக்கஞ் சேரி விக்னேஷ் (21) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து வேப்பேரி போலீஸார் கூறும்போது, ‘‘பைக் ரேஸில் ஈடுபட்டு கைதானவர்களில் சஞ்சய் என்பவர் பைக் ஷோரூமில் பணியாற்றி வருகிறார். மற்ற இருவரும் தனியார் கல்லூரி மாணவர்கள்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT