3 பேர் உயிரிழந்த விபத்து: மதுபான விடுதி உரிமையாளர் கைது

3 பேர் உயிரிழந்த விபத்து: மதுபான விடுதி உரிமையாளர் கைது
Updated on
1 min read

சென்னை: ​சென்னை ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ள தனியார் மதுபான விடுதியில் கடந்த 28-ம் தேதி இரவு கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அங்கு பணி செய்து வந்த மணிப்பூரை சேர்ந்த மேக்ஸ் (22), லல்லி (24), திண்டுக்கல்லை சேர்ந்த சைக்ளோன் ராஜ் (48) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக அபிராமபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விடுதி மேலாளர் சதீஸை கைது செய்தனர். தலைமறைவான விடுதி உரிமையாளர் உட்பட சிலரை தேடி வந்தனர். இந்நிலையில், விடுதி உரிமையாளர் அசோக்குமாரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in