Published : 30 Mar 2024 07:29 AM
Last Updated : 30 Mar 2024 07:29 AM

ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று உதகை வருகை

ஆளுநர் ஆர்.என்.ரவி

உதகை: ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக இன்று (மார்ச் 30) உதகை வருகிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் மேட்டுப்பாளையம், கோத்தகிரி வழியாக மாலை 6 மணியளவில் உதகை ராஜ்பவன் மாளிகைக்கு வருகிறார். நாளை (மார்ச் 31) முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் சென்று, யானைகள் பராமரிப்பை பார்வையிடுகிறார்.

ஏப்.1-ம் தேதி உதகை ராஜ்பவன் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். 2-ம் தேதி குன்னூருக்கும், 3-ம் தேதி குந்தா பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டுக்கும் செல்கிறார். 4-ம் தேதி காலை 11 மணியளவில் கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து சென்னை செல்கிறார்.ஆளுநர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x