Published : 30 Mar 2024 07:29 AM
Last Updated : 30 Mar 2024 07:29 AM
உதகை: ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக இன்று (மார்ச் 30) உதகை வருகிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் மேட்டுப்பாளையம், கோத்தகிரி வழியாக மாலை 6 மணியளவில் உதகை ராஜ்பவன் மாளிகைக்கு வருகிறார். நாளை (மார்ச் 31) முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் சென்று, யானைகள் பராமரிப்பை பார்வையிடுகிறார்.
ஏப்.1-ம் தேதி உதகை ராஜ்பவன் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். 2-ம் தேதி குன்னூருக்கும், 3-ம் தேதி குந்தா பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டுக்கும் செல்கிறார். 4-ம் தேதி காலை 11 மணியளவில் கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து சென்னை செல்கிறார்.ஆளுநர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT