Published : 03 Feb 2018 08:26 AM
Last Updated : 03 Feb 2018 08:26 AM
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் அரசு வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் பல லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றியதாக போலி நிருபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சிவகாசி அண்ணா காலனியைச் சேர்ந்தவர் சங்கர் (32). இவரிடம் தஞ்சாவூரைச் சேர்ந்த ஸ்ரீகுமார்(42) என்பவர் தான் ஒரு நிருபர் என்றும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.
அதை நம்பிய சங்கர், தனக்குத் தெரிந்தவர்களிடம் கூறியுள்ளார். அவர்களிடம் இருந்து ஸ்ரீகுமார் பல லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளார். ஆனால் அவர் வேலை வாங்கிக் கொடுக்காமல் இழுத்தடித்தார். அப்போது ஸ்ரீகுமார் போலி நிருபர் என்பதும், பணம் வாங்கிக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இது குறித்து திருத்தங்கல் காவல் நிலையத்தில் சங்கர் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீகுமாரை நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல பேரிடம் ரூ.24 லட்சம் வரை ஸ்ரீகுமார் வசூல் செய்தது தெரியவந்தது. தமிழகத்தில் பல இடங்களிலும் அவர் இதுபோல் மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஸ்ரீகுமாரிடம் இருந்து பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றுவது போன்ற போலி அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT