Published : 09 Feb 2018 08:56 AM
Last Updated : 09 Feb 2018 08:56 AM
காவிரி நதி நீர் பிரச்சினையில் கர்நாடகத்திடம் நியாயம் கிடைக்காததால் உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நேற்று மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு விழா ஒன்றில் கலந்துகொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ``காவிரி டெல்டா வில் காய்ந்து வரும் பல லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர்களைக் காப்பாற்றவும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 192 டிஎம்சி தண்ணீரை வழங்கக் கோரியும், கர்நாடக மாநில முதல்வரைச் சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கக் கேட்டு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியிருந்தார்.
ஆனால், கர்நாடகத்திடம் இருந்து இதுவரை அந்தக் கடிதத்துக்கு முறையான பதில் எதுவும் வரவில்லை. காவிரி பிரச்சினையில் கர்நாடகத்திடம் நியாயம் கிடைக்கவில்லை. எனவே, உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT