Published : 25 Mar 2024 06:20 AM
Last Updated : 25 Mar 2024 06:20 AM

சென்னையில் 3 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்

சென்னை: சென்னையில் 3 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் ஏப்.19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்கடந்த மார்ச் 20-ம் தேதி தொடங்கியது.

மார்ச் 27-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்க்கு கடைசி நாளாகும். அன்று மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். 28-ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். மார்ச் 30-ம் தேதி மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள்.

அந்தவகையில், நாம் தமிழர் கட்சி உட்பட சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் பாஜக வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர். தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் வினோஜ் பி.செல்வம் ஆகியோர் மதியம் 12 மணிக்கும், வட சென்னை தொகுதியில் போட்டியிடும் பால்கனகராஜ் காலை 10 மணிக்கும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்றனர். முன்னதாக, அந்தந்த மக்களவைத் தொகுதியில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x