Published : 17 Feb 2018 09:20 AM
Last Updated : 17 Feb 2018 09:20 AM

வைரமுத்து மீதான வழக்கு விசாரணை: தடை நீட்டிப்பு

ஆண்டாள் பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாக கவிஞர் வைரமுத்து மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு மார்ச் 2-ம் தேதிக்கு தள்ளிவைக்கப் பட்டது.

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, சென்னை கொளத்தூர் காவல் நிலையத்தில் முருகானந்தம் என்பவர் கொடுத்த புகாரின்பேரில், வைரமுத்து மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வைரமுத்து மனு தாக்கல் செய்தார்.

அதை விசாரித்த நீதிபதிஎம்.எஸ்.ரமேஷ், இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தார்.

தள்ளிவைப்பு

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வைரமுத்து மீதான விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கை மார்ச் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x