Published : 13 Feb 2018 08:59 PM
Last Updated : 13 Feb 2018 08:59 PM
இரு பிரிவினருக்கிடையே வன்முறை தூண்டும் வகையில் பேசிய இயக்குநர் பாரதிராஜா மீதான புகார் குறித்து விசாரித்து புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் சென்னையில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, இந்து மத கடவுகளா விநாயகரை இறக்குமதி கடவுள் என விமர்சித்தார். ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம் என பேசியுள்ளார்.
இரு பிரிவினரிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக இந்து மக்கள் முன்ன்ணி அமைப்பின் சார்பில் அதன் மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் பாரதிராஜாவுக்கு எதிராக வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாத்தால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, பாரதிராஜா மீதான புகாரில் விசாரணை நடத்தவும், விசாரணையில் அந்த புகாரில் முகாந்திரம் இருப்பதாக தெரிந்தால் வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT