Published : 19 Feb 2018 09:07 PM
Last Updated : 19 Feb 2018 09:07 PM

தென் தமிழகத்தில் 25-ம் தேதிக்கு பின் மழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

 

தென் தமிழகத்தில் வரும் 25-ம் தேதிக்கு பின் மழை இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் எழுதிவரும் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகம் மற்றும் சென்னையில் அடுத்த ஒரு வார காலத்துக்கு தற்போது இருப்பதுபோல் இயல்பான நிலையிலேயே வெப்பநிலை இருக்கும். அல்லது ஒரு டிகிரி செல்சியஸ் அளவு குறையலாம்.

தென் தமிழக்தில் குறிப்பாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி பகுதியில் வெப்பநிலை ஒரு டிகிரி முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இந்த காலநிலையை அனுபவியுங்கள், வெயில் அதிகமாக இருக்கும் என்று நினைக்கத் தேவையில்லை. சென்னையில் இன்று 30 டிகிரி செல்சியஸ் வெப்பம் மட்டுமே பதிவாகி இருந்தது

தென் தமிழகத்தைப் பொருத்தவரை வரும் 25-ம் தேதிக்கு பின் மிதமான மழை இருக்கும். பெரிய அளவிலான மழையை எதிர்பார்க்க முடியாது. ஆனால், இலங்கைக்கு நல்ல மழை இருக்கும்.

இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x