Published : 21 Mar 2024 06:06 AM
Last Updated : 21 Mar 2024 06:06 AM

சென்னையில் 3 மக்களவைத் தொகுதிகளுக்கு மத்திய தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்

சென்னை: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் 3 மக்களவை தொகுதிகளில் தேர்தல் செலவினப் பணிகளை பார்வையிட, 6 மத்திய தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடசென்னை மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் செலவினப் பார்வையாளர்களாக அபிஜித் அதிகாரி, ஜி.ஏ ஹரஹானந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சென்னை தொகுதிக்கு செலவினப் பார்வையாளர்களாக சுபோத் சிங், மதுக்கர் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தென் சென்னை தொகுதிக்கு முகேஷ் குமாரி, மானசி திரிவேதி ஆகியோர் செலவினப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய தேர்தல் செலவினப்பார்வையாளர்கள் தங்கள்பொறுப்பை கவனிக்க தொடங்கி உள்ளனர். சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 3 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முதல் செலவினப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்கள் இருக்கும் பட்சத்தில் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இலவச தொலைபேசி எண்கள் 1950, 1800 425 7012 மற்றும் 044 -2533 3001, 2533 3003, 2533 004, 2533 3005 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x