கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: ஒருசில கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியப் பகுதிகளின் மேல்,வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின்திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனைஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர பகுதிகளில்வறண்ட வானிலை நிலவக் கூடும்.

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 22, 23 தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரியை ஒட்டியும், வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர்ந்தும் இருக்கக் கூடும்.

சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரி அளவை ஒட்டியும் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in