Published : 20 Feb 2018 08:05 PM
Last Updated : 20 Feb 2018 08:05 PM

வட தமிழகம், சென்னையில் ஓரிரு இடங்களில் மூடுபனி கொட்டும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே காணப்படும். வட தமிழகம் மற்றும் சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மூடுபனி கொட்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், ''தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே காணப்படும். வட தமிழகம் மற்றும் சென்னையில் அதிகாலை நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மூடுபனி கொட்டும். இதன்காரணமாக குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும்.

சென்னையில் பகல்நேரத்தில் மட்டும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x