Published : 20 Feb 2018 12:06 PM
Last Updated : 20 Feb 2018 12:06 PM
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தெற்கு ரயில்வே கட்டிடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே தெற்கு ரயில்வே அலுவலகத்தின் பொதுமேலாளர் அலுவலகத்தின் 4 ஆவது மாடியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் அலுவலகத்தில் இருந்த நாற்காலிகள், முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்தன.
5 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். சில மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. போலீஸார் இதுகுறித்த விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT