Published : 25 Feb 2018 10:06 AM
Last Updated : 25 Feb 2018 10:06 AM

கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர 2 லட்சம் பேர் விண்ணப்பம்

கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர இணையதளத்தில் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கடந்த 21-ம் தேதி தொடங்கினார். இந்த கட்சிக்காக மய்யம்.காம் (www.maiam.com) என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் தொடங்கப்பட்டது. கட்சியில் சேர விரும்புவோர், மய்யம் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும்படி கமல் அழைப்பு விடுத்திருந்தார். இந்தியா, அமெரிக்கா, அரபு நாடுகள், சிங்கப்பூர், இங்கிலாந்து, மலேசியா , சவுதி அரேபியா, கனடா ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் மய்யம் இணையதளத்தை பார்வையிட்டு கட்சியில் உறுப்பினராக சேர்ந்துள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்ட 2-வது நாளில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவில், மய்யம் இணையதளம் பக்கத்தை மொத்தம் 8,32,864 பேர் பார்வையிட்டுள்ளனர். இணையதளம் மூலமாக 2,01,597 பேர் கட்சியில் உறுப்பினராக சேர்வதற்கு விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு உறுப்பினருக்கான தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ட்விட்டர் பக்கத்தை 35,400 பேர் லைக் செய்துள்ளனர். கட்சியின் பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பான மதுரை பொதுக்கூட்ட வீடியோவை 7 லட்சத்து 16 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். அன்றைய தினம் ட்விட்டர் ட்ரெண்டிங் பட்டியலில் இந்திய அளவில் மக்கள் நீதி மய்யம் என்ற ஹாஷ்டேக்கில் முதலிடம் பிடித்திருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x