Published : 10 Feb 2018 05:32 PM
Last Updated : 10 Feb 2018 05:32 PM
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ''தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது வலுவிழந்துவிட்டது. அதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 32 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் இருக்கும்'' என்று அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT