Published : 02 Feb 2018 10:38 AM
Last Updated : 02 Feb 2018 10:38 AM
விழுப்புரம் அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் இருஇளைஞர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம் அருகே காணை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மனைவி விசாலாட்சி (49). இவர் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி அக்கிராமத்தில் உள்ள நிலத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த குப்பத்தைச் சேர்ந்த திருஞானம் (23), காணை கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் (23) ஆகியோர் அவரை வலுகட்டாயமாக துாக்கி கொண்டு அருகே உள்ள கரும்பு வயலுக்கு சென்றனர். பின்னர் அவரை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். விசாலாட்சி கூச்சலிடவே, அவர் அணிந்திருந்த 2 பவுன் நகைகளை பறித்து விட்டு இருவரும் தப்பியோடினர்.
விசாலாட்சி புகாரின் பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிவராஜ், திருஞானம் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், சிவராஜிற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், திருஞானத்திற்கு 20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த அபராத தொகையை, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நஷ்டஈடாக வழங்கவும் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT