Published : 09 Mar 2024 09:12 AM
Last Updated : 09 Mar 2024 09:12 AM

சென்னையில் 10+ இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: சென்னையில் பல இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகார் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் கரூரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரை சேர்ந்த செல்வராஜ், அரசு ஒப்பந்ததாரர் என சொல்லப்படும் நிலையில், ஜவுளி நிறுவனமும் நடத்தி வருகிறார். இவரது வீட்டுக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 பேர், காலை 7.30 மணி முதல் சோதனையிட்டு வருகின்றனர்.

இதேபோல் சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் மதுபான பாரிலும் சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவை தவிர, சென்னை வேப்பேரி, பாரிமுனை, தேனாம்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலை என சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கரூரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x