சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 18 பேர் தாயகம் திரும்பினர்

சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 18 பேர் தாயகம் திரும்பினர்
Updated on
1 min read

ராமேசுவரம்: ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து பிப். 9-ம் தேதிகடலுக்குச் சென்ற அன்றன் சசிக்குமார், அலெக்ஸ் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். மேலும், படகுகளிலிருந்த 19 மீனவர்களைக் கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இதில் 18 மீனவர்களை கடந்த பிப். 22-ம் தேதி ஊர்க்காவல் துறை நீதிமன்றம் விடுதலை செய்தது. படகு ஓட்டுநர் ஜான்சனுக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. விடுதலை செய்யப்பட்ட 18 மீனவர்கள்நேற்று முன்தினம் கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை வந்தடைந்தனர். பின்னர் அவர்களை மீன்வளத் துறையினர் தனி வாகனத்தில் ராமேசுவரத்துக்கு நேற்று காலை அழைத்து வந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in