Published : 22 Feb 2018 09:48 AM
Last Updated : 22 Feb 2018 09:48 AM

இளைஞர்களுக்கு நிறைய திட்டங்களை வைத்துள்ளேன்: மானாமதுரையில் நடிகர் கமல் அறிவிப்பு

வளமான எதிர்காலத்தை நமக்காக உருவாக்க இளைஞர்களுக்கு நிறைய திட்டங்களை வைத்துள்ளேன் என கமல்ஹாசன் கூறினார்.

ராமேசுவரத்தில் இருந்து மதுரை செல்லும் வழியில் சிவகங்கை மாவட்டம், மானா மதுரையில் நடிகர் கமல்ஹாசனுக்கு அவரது ரசிகர் மன்றத்தினரால் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு மேடை அமைக்கப்பட்டு ஒருவர் மட்டும் அமர இருக்கை போடப்பட்டிருந்தது. அவரது ரசிகர்கள், பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.

அப்போது, மேடை முன்பாக வந்த கமல்ஹாசன், காரில் இருந்தவாறு கூட்டத்தினரை பார்த்து கும்பிட்டார். பின்னர் மைக்கில் அவர் பேசினார். அதன்பின், மதுரை செல்லும் வழியில் திருப்புவனத்தில், அவரது ரசிகர்கள், பொதுமக்கள் திடீரென கமல்ஹாசனின் காரை மறித்தனர். இதையடுத்து, காரை நிறுத்திய கமல், அவர்கள் மத்தியில் பேசியதாவது:

நான் அரசியலுக்கு வந்ததே எனது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனைதான். அந்த திருப்பு முனையில் இந்த திருப்புவனமும் சம்பந்தப்பட்டுள்ளது. மக்களுக்கு, இளைஞர்களுக்கு நிறைய திட்டங்களை வைத்துள்ளேன். அதுதொடர்பாக, மதுரை பொதுக் கூட்டத்தில் அறிவிக்கிறேன். இங்கு கூடிய கூட்டமெல்லாம் மதுரைக்கு வாருங்கள். வளமான எதிர்காலத்தை நமக்காக உருவாக்க நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x