2 துணைவேந்தர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ் குமாரின் பதவிக் காலத்தை மேலும் ஓர் ஆண்டு காலத்துக்கு நீட்டித்து, அதற்கான  ஆணையை, சென்னை கிண்டி ராஜ்பவனில், ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, அவரிடம் வழங்கினார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ் குமாரின் பதவிக் காலத்தை மேலும் ஓர் ஆண்டு காலத்துக்கு நீட்டித்து, அதற்கான ஆணையை, சென்னை கிண்டி ராஜ்பவனில், ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, அவரிடம் வழங்கினார்.
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமார், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணவேந்தர் கே.என்.செல்வகுமார் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் முடிவடைகிறது.

இந்நிலையில், இருவரின் பதவிக்காலத்தையும் ஏப்ரல் 9-ம்தேதியில் இருந்து ஓராண்டு காலம்நீட்டித்து பல்கலைக்கழக ஆளுநரான ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இரு துணைவேந்தர்களும் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பதவி நீட்டிப்பு ஆணையை பெற்றுக்கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in