Published : 27 Feb 2018 07:35 AM
Last Updated : 27 Feb 2018 07:35 AM
ஜப்பான் நாட்டு நிறுவனங்களின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் அதிகாரிகள் குழு 5 நாள் பயணமாக அந்நாட்டுக்குச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உலக முதலீட்டாளர் மாநாடு வரும் 2019 ஜனவரியில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, ஜப்பான் நாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், தொழில்துறை செயலர், சிறு, குறு, நடுத்தர தொழில்துறை செயலர் உள்ளிட்டோர் 5 நாள் பயணமாக அந்நாட்டுக்குச் சென்றுள்ளனர்.
அவர்கள் பிப்ரவரி 26-ம் தேதி முதல் மார்ச் 2-ம் தேதி வரை ஜப்பானில் தங்கி, அந்நாட்டின் வர்த்தக அமைப்புகள், நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். டோக்கியோ, யோகோஹாமா, ஹமாமாட்சூ ஆகிய நகரங்களுக்குச் செல்லும் அவர்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதால் கிடைக்கப்போகும் பலன்களை எடுத்துரைக்க உள்ளனர். இதுதவிர, ஜப்பான் அரசு அதிகாரிகளையும் சந்தித்துப் பேச உள்ளனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT