

கோவை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன்,கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
வருங்கால இந்தியா, மிக உயர்ந்த, மதிப்புக்குரிய, வளமான, வலிமையான இந்தியாவாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமையும். கடந்த10 ஆண்டுகள் மோடி தலைமையிலான பாஜக அரசு மேற்கொண்ட மக்கள் பணிகள், வரும்மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு காரணமாக அமையும்.
பாஜக கூட்டணிக்கு மக்களவைத்தேர்தலில் மக்கள் உரிய அங்கீகாரம் தருவார்கள் என நம்புகிறோம். பிரதமர் மோடி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தமாகாதொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.