Published : 05 Feb 2018 09:37 AM
Last Updated : 05 Feb 2018 09:37 AM
காவிரி நீர் பிரச்சினையில் நீதிமன்ற உத்தரவை இரு மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும் என நடிகர் விஷால் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் நேற்று செய்தியாளர்களிடம் நடிகர் விஷால் கூறியதாவது: தமிழகத்தில் பேருந்துக் கட்டண உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். பேருந்துக் கட்டண உயர்வால் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். காவிரி நீர் பிரச்சினையில் நடிகர்கள் ரஜினி, கமல் குரல் கொடுத்தால் நல்லது. குரல் கொடுக்கவில்லை என்றால், ஏன் அவர்கள் குரல் கொடுக்கவில்லை என என்னால் கேள்வி கேட்க முடியாது. காவிரி நீர் பிரச்சினையில் இரு மாநில அரசுகளும் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் செயல்பட்டால் நல்லது. வேறு துறைகளுக்கு சலுகைகள் கொடுக்கும்போது விவசாயிகளுக்கு ஏன் சலுகைகள் கொடுக்கக் கூடாது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பல கட்சிகள் வரும். ரஜினி, கமலின் அரசியல் செயல்பாடுகளை கவனித்து வருகிறேன்.
ஓராண்டு கால தமிழக அரசின் செயல்பாடுகளை பொறுத்தவரை, மக்களுக்கு நன்மை செய்யும் அரசாகச் செயல்பட்டால் சந்தோஷமான வாக்காளராக நானும் இருப்பேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT