Published : 02 Feb 2018 08:46 AM
Last Updated : 02 Feb 2018 08:46 AM
பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்ட வழக்கில், மேலும் 3 பேரை நேற்று ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
கடந்த 30-ம் தேதி அரக்கோணம் நோக்கி சென்ற மின் ரயிலில் பயணித்த சில கல்லூரி மாணவர்கள் , பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் வேறோரு கல்லூரி மாணவர்களை ஆயுதங்களால் தாக்கினர். இதில் 3 மாணவர்கள் காயமடைந்தனர். பயணிகள் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பூர் ரயில்வே போலீஸார், மோகன் என்ற மாணவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில் மேலும் தினேஷ்குமார், ராம்சுந்தர், சுரேந்தர் ஆகிய 3 மாணவர்களை நேற்று கைது செய்தனர். மேலும், 7 மாணவர்களை தேடுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT