Published : 22 Feb 2018 10:25 PM
Last Updated : 22 Feb 2018 10:25 PM
தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். சென்னையின் முக்கிய உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுதும் சமீபத்தில் பதவி உயர்வு பெற்ற காவல் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 18 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதில் சென்னையின் தெற்கு மண்டல இணை ஆணையர் அன்பு, மேற்கு மண்டல இணை ஆணையர் சந்தோஷ்குமார், கிழக்கு மண்டல இணை ஆணையர் மனோகரன் உள்ளிட்டோர் மாற்றப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த விவரம்:
சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் டி.அன்பு சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற போக்குவரத்து கிழக்கு மண்டல துணை ஆணையர் மகேஷ்வரி சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
சமீபத்தில் டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற டெல்லியில் அயல் பணியில் உள்துறை கூடுதல் துணை இயக்குனராக பதவி வகிக்கும் கே.செந்தில் வேலன் அதே அயல் பணியில் நீடிக்கிறார்.
சமீபத்தில் டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற டெல்லியில் அயல்பணியில் உள்துறையில் ஐபியில் கூடுதல் துணை இயக்குனராக பதவி வகிக்கும் அவினாஷ்குமார் அதே துறையில் டிஐஜியாக பதவி வகிக்கிறார்.
சமீபத்தில் டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற டெல்லியில் அயல்பணியில் சிபிஐ எஸ்.பியாக பதவி வகிக்கும் அஸ்ரா கார்க் அதே துறையில் பதவி வகிக்கிறார்.
சமீபத்தில் டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற சென்னை சைபர் செல் சிபிசிஐடி எஸ்பியாக பதவி வகிக்கும் ஏஜி.பாபு சென்னை காவல் ஆணையர் அலுவலக தலைமையிட டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
சமீபத்தில் டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற சென்னை வணிக குற்ற புலனாய்வு பிரிவு எஸ்பி செந்தில்குமாரி சென்னை காவல் அலுவலக நிர்வாக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற சிபிஐ. பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி துரை குமார்,அதே துறையில் டிஐஜியாக தொடர்கிறார்.
சமீபத்தில் டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற சென்னை சிபிசிஐடி எஸ்பி ஆசியம்மாள் சென்னை காவலர் பயிற்சி கல்லூரி டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
சமீபத்தில் டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி ராதிகா, அதே துறையில் டிஐஜியாக தொடர்கிறார்.
சமீபத்தில் டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற பொருளாதார குற்றப்பிரிவு, சென்னை தலைமையிட எஸ்.பி லலித லட்சுமி திருச்சி டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
சமீபத்தில் டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற சென்னை மெட்ரோ ரெயில் தலைமை பாதுகாப்பு அதிகாரி எஸ்.பி. ஜெயகவுரி சென்னை ஆயுதப்படை டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
சமீபத்தில் டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற ஆவடி சிறப்பு காவற்படை பட்டாலியன் கமாண்டண்ட் காமினி ராமநாதபுரம் டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
உளவுப்பிரிவு டிஐஜி ஜோஷி நிர்மல் குமார் திண்டுக்கல் டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் டிஐஜி கார்த்திகேயன் கோவை டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
திருச்சி டிஐஜி பவானீஸ்வரி கடலோர காவல் குழும டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் சந்தோஷ்குமார் விழுப்புரம் டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
வேலூர் சிறைத்துறை டிஐஜி பாஸ்கரன் சென்னை மனித உரிமை ஆணைய டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
மேற்கண்ட உத்தரவை உள்துறை செயலர் நிரஞ்சன் குமார் மார்டி பிறப்பித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT