“2 மக்களவை தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்கிறோம்” - துரை வைகோ

துரை வைகோ | கோப்புப் படம்
துரை வைகோ | கோப்புப் படம்
Updated on
1 min read

ராமநாதபுரம்: திமுக கூட்டணியில் 2 மக்களவை தொகுதிகளும், ஒரு மாநிலங் களவை உறுப்பினர் பதவியும் கேட்க உள்ளோம் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக கூட்டணி பேச்சு வார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது. இம்முறை 2 மக்க ளவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கேட்க உள்ளோம். மாபெரும் தமிழ் கனவு என்ற தலைப்பில் தமிழக அரசு சிறந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. வேளாண் பட்ஜெட்டில் ரூ.42 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. ரூ.108 கோடி எண்ணெய் வித்துகள் உற்பத்தி செய்ய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதனால் நியாய விலைக் கடைகளில் கடலை எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற வற்றை விற்க வேண்டும். அது விவசாயிகளின் பொருளா தாரம் மற்றும் மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும். இதை தமிழக அரசுக்கு வேண்டு கோளாக வைக்கிறோம். மத்திய பாஜக அரசு ஆண்டுக்கு 10 கோடி வேலை வாய்ப்பு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என 10 ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன வாக்குறுதி களை நிறைவேற்றவில்லை. விவசாயிகள் பிரச்சினையை தீர்க்கவில்லை.

போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது கண்மூடித் தனமாக தாக்கி வருகிறது. அதனால் வரும் தேர்தலில் பாஜக தோல்வியை தழுவும். தமிழகத்தில் 39 தொகுதிகளில் ‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெறும். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜய் தமிழக மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் அரசியலுக்கு வந்துள் ளார், இவ்வாறு அவர் கூறினார். ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி, மதிமுக மாவட்டச் செயலாளர் வி.கே.சுரேஷ் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in