Last Updated : 19 Feb, 2018 10:43 AM

 

Published : 19 Feb 2018 10:43 AM
Last Updated : 19 Feb 2018 10:43 AM

அரசியல் ஒரு சாக்கடை.. இதில் யார் வந்தால் என்ன?- அழகிரி கருத்து

அரசியல் ஒரு சாக்கடை.. இதில் யார் வந்தால் என்னவென்று திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த தாயில்பட்டியில் திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் அழகிரி இன்று (திங்கள்கிழமை) கலந்து கொண்டார்.

விழாவில் கலந்துகொண்டுவிட்டு அவர் காரில் ஏற முற்பட்டபோது செய்தியாளர்கள் அவரிடம் திமுக செயல்தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுபினர்.

அதற்கு அழகிரி, "அரசியல் ஒரு சாக்கடை.. இதில் யார் வந்தால் என்ன" எனக் கூறினார். மேலும், சில கேள்விகளை செய்தியாளர்கள் முன்வைக்க அவற்றைப் புறக்கணித்துவிட்டு காரில் ஏறிச் சென்றுவிட்டார்.

திமுக செயல்தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் கட்சியில் அண்மைக்காலமாக முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார். அண்மையில், நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட உதயநிதி "இனி என்னை அடிக்கடி பொது மேடைகளில் பார்க்கலாம்" என்று கூறினார்.

உதயநிதி ஸ்டாலினின் திடீர் அரசியல் பிரவேசம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மத்தியில்கூட அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக சலசலக்கப்படும் நிலையில் அழகிரியின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x