Published : 09 Feb 2018 09:27 AM
Last Updated : 09 Feb 2018 09:27 AM

இன்று முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் ஆளுநர் மாளிகையை பொதுமக்கள் சுற்றிப் பார்க்கலாம்

தமிழக பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் இருந்தபோது, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை பொதுமக்கள் பார்வையிட அனுமதியளிக்கப்பட்டது. இதன்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 முதல் 5.30 மணிவரை குறிப்பிட்ட அளவிலான நபர்கள் மட்டும் பார்வையிட முடியும்.

கடந்த அக்டோபர் மாதம் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்ற பிறகும் இந்த நடைமுறை தொடர்ந்தது. இந்நிலையில், இன்றுமுதல் அனைத்து வேலை நாட்களிலும் ஆளுநர் மாளிகையை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

சென்னையில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் 9-ம் தேதி (இன்று) முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் ஆளுநர் மாளிகையை சுற்றிப் பார்க்க மாலை 4-30 மணி முதல் 5-30 மணி வரை அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையை பார்வையிட வருவோர், அங்கு அமைந்துள்ள குடியரசுத் தலை வர் மற்றும் முக்கியப் பிரமுகர் கள் தங்கும் இடம், தமிழக ஆளுநரின் இல்லம், பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் தர்பார் அரங்கம், மான்கள் சுற்றித் திரியும் பரந்த புல்வெளி ஆகியவற்றை காணலாம். சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு மின்கலத்தால் இயங் கும் வாகனங்களின் மூலம் ராஜ்பவனை சுமார் ஒரு மணி நேரம் சுற்றிப் பார்க்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பான விவரங்களை, ‘www.tnrajbhavan.gov.in’ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். அந்த இணையதளத்திலேயே முன்பதிவும் செய்யலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x