பெட்ரோல் பங்குகளுக்கான உரிமம் வழங்கும் விவகாரத்தில் சட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா? - களஆய்வு செய்ய உத்தரவு

பெட்ரோல் பங்குகளுக்கான உரிமம் வழங்கும் விவகாரத்தில் சட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா? - களஆய்வு செய்ய உத்தரவு
Updated on
2 min read

சென்னை: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெட்ரோல் பங்குகளுக்கான உரிமம் வழங்கும் விவகாரத்தில் உரிய விதிமுறைகள் சட்டப்பூர்வமாக பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை மத்திய, மாநில அரசு அதிகாரிகள் நேரில் களஆய்வு செய்ய வேண்டும். அதில் திருப்தியடைந்தால் மட்டுமே உரிமம் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்த தாவது:

மக்களிடம் விழிப்புணர்வு இல்லை: பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புறச் சூழலை கருத்தில்கொண்டு பெட்ரோல் பங்குகளுக்கு பல்வேறு நிபந்தனைகள்விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த விதிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இருப்பது இல்லை.

பொதுவாக பெட்ரோல் பங்குகள் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்களை உற்பத்தி செய்யும் கனரக தொழில் நிறுவனங்கள் போன்றவற்றில் இருந்து குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் இருக்க வேண்டும். தீயணைப்பு வாகனங்கள் தடையின்றி செல்ல பாதை இருக்க வேண்டும்.

இந்த விதிமுறைகளை எந்த பெட்ரோலிய நிறுவனமும் கடைபிடிப்பதில்லை. பெட்ரோலிய எண்ணெய் கசிவுகளால் புற்றுநோய், மூளை,நரம்பு பாதிப்பு போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளதாக பல்வேறு ஆராய்ச்சிகளும் தெரிவிக்கின்றன. ஆனால், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலனுக்கு தீங்குவிளைவிக்கும் வகையில் பெட்ரோல் பங்குகளுக்கு விதிகளுக்கு புறம்பாக உரிமமும், தடையில்லா அனுமதியும் வழங்கப்படுகிறது.

பல பெட்ரோல் பங்குகள் போலியான தடையில்லா சான்று சமர்ப்பித்து மத்திய அரசிடமிருந்து உரிமம் பெற்றுள்ளன. இவற்றைமத்திய, மாநில அரசு அதிகாரிகளும்ஆய்வு செய்வது இல்லை.

சிபிஐ விசாரணை வேண்டும்: எனவே, இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அத்துடன், இனிவரும் காலங்களில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகள் நேரடியாக களஆய்வு செய்து அனுமதியளித்த பிறகே, பெட்ரோல் பங்குகளுக்கு உரிமம் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதிஎஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி அமர்வில்விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான வி.பி.ஆர்.மேனனும், மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசனும், எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் வழக்கறிஞர் ஆனந்த் நடராஜனும் ஆஜராகி வாதிட்டனர்.

கள ஆய்வு செய்ய வேண்டும்: அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘இந்த வழக்கு பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு தொடரப்பட்டுள்ளது. எனவே, பெட்ரோல் பங்குகளுக்கான உரிமம் வழங்கும்முன்பாக உரிய விதிமுறைகள் சட்டப்பூர்வமாக பின்பற்றப்பட்டுள் ளதா என்பதை மத்திய, மாநில அரசுகள் கண்டிப்பாக நேரில் களஆய்வு மேற்கொண்டு கண்டறிந்து திருப்தியடைந்தால் மட்டுமே உரிமம் வழங்க எடுக்க வேண்டும்.

அதற்காக எல்லா பெட்ரோல் பங்குகளையும் ஆய்வு செய்தாக வேண்டும் என்பதில்லை. எந்த பெட்ரோல் பங்குகள் மீது சந்தேகம் உள்ளதோ, அந்த விற்பனை நிலையங்களின் மெய்த்தன்மை குறித்து மீண்டும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கலாம்’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in