

சென்னை: கர்நாடக அரசின் பட்ஜெட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருப்பதற்கு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: திமுக அரசு, கடந்த1-ம் தேதி காவிரி மேலாண்மைஆணையத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து உடனடியாக உச்சநீதிமன்றம் செல்லாமல் காலதாமதம் செய்ததால், கர்நாடக அரசுமாநில பட்ஜெட்டில், உரிய அனுமதிபெற்று காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படும் என்று அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை வெளிப்படையா கவே மீறுவது நீதிமன்ற அவ மதிப்பாகும்.
மேகதேதாட்டு அணை கட்டினால், 20 மாவட்டங்களில் குடிநீர்ப் பிரச்சினை ஏற்படும். டெல்டா மாவட்டங்கள் விவசாயத்துக்கு தண்ணீர் இன்றி பாலைவனமாகும். எனவே அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு உடனடியாக கைவிடவேண்டும். தவறினால் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக விவசாயிகள் மற்றும் பொதுமக்களைத் திரட்டி மாபெரும் அறப் போராட்டத்தை அதிமுக முன்னெடுக்கும்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மேகேதாட்டு அணை கட்டப்படும் என்று கர்நாடக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது தமிழக மக்களை பேரதிர்ச்சிக்குள் ளாக்கியுள்ளது. இது கண்டனத்துக் குரியது. அம்மாநில அரசை கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசிடமும், உச்ச நீதிமன்றத்திலும் முறையிட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: மேகேதாட்டு அணை கட்டப்படும் என்ற கர்நாடக அரசின் அறிவிப்பு, மாநிலங்களிடையே நிலவும் நல்லுறவுக்கு வலு சேர்க்காது. கூட்டாட்சி கோட்பாட்டுக்கும் எதிரானது என்பதை கர்நாடக மாநில அரசும், மக்களும் உணர வேண்டும். கர்நாடக அரசின் இந்த அறிவிப்பைக் கண்டிக்கிறோம்.
ஐஜேகே பொதுச்செயலாளர் பி.ஜெயசீலன்: கர்நாடகத்தின் சூழ்ச்சியை முறியடிக்க, தமிழக அரசு சட்டப் போராட்டம் மட்டுமல்லாது, தொடர் போராட்டங் களையும், அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்போடு முன்னெடுக்க வேண்டும். கர்நாடகஅரசு அணைகட்டும் முயற்சியை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.