Published : 06 Feb 2018 10:13 AM
Last Updated : 06 Feb 2018 10:13 AM
``கொள்கையில் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே வேறுபாடு இல்லை” என்று, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
திருநெல்வேலியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாளையங்கோட்டையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய என் மீது, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜரானேன். இந்த வழக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா இருந்தபோது மாநில உரிமைகளுக்காக போராடினார். இப்போது மாநில உரிமைகளை ஒவ்வொன்றாக விட்டுக்கொடுத்து வருகின்றனர்.
மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும் 2019-ம் ஆண்டு வரை தமிழக ஆட்சிக்கு சிக்கல் வராது. இந்த ஆட்சியை கலைக்க பாஜக அனுமதிக்காது. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் ஆட்சியாளர்களுக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் ஆட்சி கலைய வாய்ப்பு உள்ளது.
மத்தியில் ஒற்றைத் தலைமை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு கூட்டாட்சி அமைய வேண்டும்.
பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஒரே கொள்கைதான் உள்ளது. இந்த கட்சிகளுக்கு இடையே எந்த வேறுபாடும் இல்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT