Published : 16 Feb 2024 06:20 AM
Last Updated : 16 Feb 2024 06:20 AM

ரயில் ஓட்டுநர்கள் சென்னையில் உண்ணாவிரதம்

சென்னை: ரயில் ஓட்டுநர்களின் பணி நேரத்தை 12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக குறைக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளிகள் (ரயில் ஓட்டுநர்கள்) சங்கம் சார்பில், சென்னை, சேலம், மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 5 கோட்டங்களில் பல்வேறு இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது.

சென்னை போராட்டத்தில் அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளிகள் சங்கத்தின் மத்திய அமைப்பு செயலாளர் பாலச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x