திமுக எதிர்ப்பு அலை அதிமுகவுக்கு வாக்குகளாக மாறும்: வைகைச்செல்வன் நம்பிக்கை

வைகைச் செல்வன் | கோப்புப் படம்
வைகைச் செல்வன் | கோப்புப் படம்
Updated on
1 min read

காரைக்குடி: திமுக எதிர்ப்பு அலை அதிமுகவுக்கு வாக்குகளாக மாறும் என்று அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன் தெரிவித்தார்.

காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவையில் அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு மரபுப்படி இருக்கை வழங்கப்பட்டது. இதன் மூலம் எங்களுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. தேர்தல் வியூகம் அமைத்து வருகிறோம். கூட்டணி சேர பல கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. நல்ல தகவல் விரை வில் அறிவிக்கப்படும். தமிழகம் கஞ்சா மாநிலமாக மாறி வருகிறது. கொலை, கொள்ளைகள் எல்லை மீறி நடந்து வருகின்றன.

சட்டம், ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் தவறிவிட்டார். சொத்து, வீட்டு வரி உயர்வு, குடிநீர், பால், பேருந்து கட்டண உயர்வால் ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு, சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர். திமுக எதிர்ப்பு அலை அதிமுகவுக்கு வாக்குகளாக மாறும். தமிழக பட்ஜெட் உரை முன்னுக்குப் பின் முரணான உரை. பொய் மூட்டையை கட்டியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in