

தருமபுரி: தருமபுரி அடுத்த நல்லம்பள்ளியில் புளியமரத்தில் புளி உலுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த முதியவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயவேல் (65). இவர் இன்று காலை நல்லம்பள்ளி வாரச்சந்தை வளாகம் அருகே உள்ள தனியார் வளாகத்தில் இருந்த புளியமரத்தில் இருந்த புளிகளை உலுக்கி அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
சுமார் 30 அடி உயர மரத்தின் உச்சிப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது கை நழுவியதால் ஜெயவேல் கீழே விழுந்தார். அதில் பலத்த அடிபட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக அதியமான்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.