

காரைக்குடி: காரைக்குடியில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணியினர், நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
காதலர் தினம் கொண்டாடுவதற்கு இந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று காதலர் தினத்தையொட்டி காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச் செயலாளர் அக்னி பாலா தலைமை வகித்தார். நகரத் தலைவர் கார்த்தி, நிர்வாகிகள் ஜெயக் குமார், சுரேஷ், பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.