ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக பேரவையில் இன்று தீர்மானம்

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக பேரவையில் இன்று தீர்மானம்
Updated on
1 min read

சென்னை: ‘ஒரே நாள் ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட 2 அரசினர் தனித் தீர்மானங்கள் சட்டப்பேரவையில் இன்று கொண்டு வரப்படுகின்றன.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.

முன்னதாக கேள்வி நேரம் முடிந்ததும், மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்த வலியுறுத்தியும் இரண்டு அரசினர் தனித் தீர்மானங்கள் இன்று முன்மொழியப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in