

சென்னை: சென்னை காவல்துறை சார்பில் முதல் குதிரை ஏற்றப்போட்டி பிப்.23 முதல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளுக்காக ரூ.5 லட்சம் நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரிடம் நேற்று வழங்கினார்.
சென்னை குதிரைப்படை 1780-ம் ஆண்டு, சென்னை மாகாண ஆளுநர் வில்லியம் லாங்கனால் தொடங்கப்பட்டு, அவரதுபாதுகாப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் 1800-ம்ஆண்டு முதல் இப்படையில் உள்ளகுதிரைகள் சென்னை காவல் கண்காணிப்பாளர் வால்டர் கிராண்டால் சென்னை காவல்துறைக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.
அதன் பிறகு 1926-ம் ஆண்டுமுதல் சென்னை காவல் குதிரைப்படை ஒரு சார்ஜன்ட் தலைமையில் ஒரு தனிப்பிரிவாக ஆரம்பிக்கப்பட்டு, சென்னை காவல் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன் பிறகு சென்னை காவல் குதிரைப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, தற்போது, சென்னை பெருநகர காவல் குதிரைப்படை எழும்பூரில் இயங்கி வருகிறது.
பிப்.23-ல் போட்டி தொடக்கம்: சென்னை காவல்துறை, குதிரைப்படைபிரிவை மேம்படுத்தவும், போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முதல் குதிரையேற்ற போட்டியை பிப்.23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை சென்னையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.
இந்நிலையில், குதிரையேற்ற போட்டி ஏற்பாடுகளுக்காக, சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட ரூ.5 லட்சத்துக்கான காசோலையை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரி டம் வழங்கினார்.