புதுவையில் விசேஷ நிகழ்வுகளிலும் பஞ்சு மிட்டாய்க்கு தடை விதிப்பு

புதுவையில் விசேஷ நிகழ்வுகளிலும் பஞ்சு மிட்டாய்க்கு தடை விதிப்பு
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளிலும் பஞ்சு மிட்டாய்களுக்கு தடை விதித்து உணவுப் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு கடற்கரைச் சாலை உள்ளிட்ட இடங்களில் வடமாநில இளைஞர்களால் விற்கப்பட்ட பஞ்சுமிட்டாய்களை உணவுப் பாதுகாப்பு துறையினர் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

அப்போது அதில் இருந்த வர்ணங்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப் பொருள்கள் கலந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பஞ்சு மிட்டாய்களை ஜிப்மர் மருத்துவக் கல்லூரி ஆய்வ கத்துக்கு எடுத்துச் சென்றனர். பரிசோதனையில் பஞ்சுமிட்டாயில் தடை செய்யப்பட்ட வேதிப் பொருள் வர்ணத்துக்காக சேர்த் திருப்பது உறுதியானது.

இதையடுத்து, புதுவை மாநிலத்தில் பஞ்சு மிட்டாய்களை விற்கத் தடை விதித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டார். இதற்கிடையே, திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளிலும் குழந்தைகளைக் கவரும் வகையில் பஞ்சுமிட்டாய்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த பஞ்சு மிட்டாய்களிலும் வேதிப் பொருள்கள் கலந்திருப்பது தெரியவந்ததால் அவற்றையும் தடைசெய்திருப்பதாக உணவுக்கட்டுப் பாட்டுத்துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in