

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே திருநல்லூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். 78 பேர் காயமடைந்தனர்.
திருநல்லூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டை இலுப்பூர் கோட்டாட்சியர் தெய்வநாயகி தொடங்கிவைத்தார். தொடக்கத்தில் கோயில் காளைகளும் அதைத் தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 737 காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.
காளைகளை அடக்குவதற்கு 200 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். இதில், காளைகள் முட்டியதில் காளைகளின் உரிமையாளர்கள் 16 பேர் உட்பட 79 பேர் காயமடைந்தனர். அதில் படுகாயம் அடைந்த கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கொத்தம்பட்டியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் பாஸ்கர்(30) உயிரிழந்தார். பாதுகாப்பு பணிகளை இலுப்பூர் போலீஸார் மேற்கொண்டனர்.