உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கக் கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி போராட்டம்

உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கக் கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி போராட்டம்
Updated on
1 min read

உடுமலை: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு பிஏபி பாசனத்தில் உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கக் கோரி, உப்பாறு பாசன விவசாயிகள் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

திருமூர்த்தி அணைக்குள் குடியேறும் போராட்டத்தை விவசாயிகள் அறிவித்த நிலையில் கோட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பேசிய பொதுப்பணித் துறை அதிகாரிகள், உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது. எனினும் இதுவரை தண்ணீர் திறக்கப்படாததால் நேற்று 19-ம் நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

அப்போது, போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சிவக் குமார் மற்றும் சில விவசாயிகள், அங்குள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பலமணி நேர பேச்சு வார்த்தைக்குப் பின்னர் விவசாயிகள் சமாதானமடைந்து, செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கி வந்தனர். பின்னர், காத்திருப்புப் போராட்டத்தை தொடர்ந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in