பிஎன்எஸ் சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற கனரக வாகன ஓட்டுநர் கோரிக்கை

பிஎன்எஸ் சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற கனரக வாகன ஓட்டுநர் கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: பாரதிய நியாய சங்கீதா (பிஎன்எஸ்) என்ற புதிய சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக இந்திய கனரக வாகன ஓட்டுநர்கள் நல கூட்டமைப்பு, முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ரூ.7 லட்சம் அபராதம்: ஒட்டுநர் கவனக்குறைவு காரணமாக மரணம் ஏற்பட்டால் அதிகபட்சம் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். தற்போது உருவாக்கப்பட்ட பாரதிய நியாய சங்கீதா (பிஎன்எஸ்) சட்டத்தின்படி, ஓட்டுநர் மரண விபத்தை ஏற்படுத்தினால் 5 ஆண்டுகள் தண்டனையும், விபத்து நடந்த இடத்திலிருந்து ஓட்டுநர் தப்பித்து சென்றால் 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.7 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

இதற்கெதிராக வடமாநிலஒட்டுநர்கள் நடத்திய போராட்டத்தையடுத்து ஒன்றிய அரசு சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த சூழல் எங்களுக்கு மனவேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, இந்த சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in